Samstag, 19. November 2011

மனிதநேயத்தின் மறுபிறவி தோழர் க.பத்மநாபாஅவனியில் அவதரித்து அறுபது ஆண்டுகள் 19.11.1951--19.11.2011


மக்களின் அவலம் கண்டு-தன்
மடியிலிருந்து தந்தாள்-மக்களுக்காக
மாசற்ற மாணிக்கம் தனை-அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மகிமை எண்ணம் என்றும்
மலர்ந்த முகம் யாருக்கு வரும்
மனிட உலகத்தில் அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மலர்ச்சி இழந்த மக்களின்
மகிழ்ச்சி முகம் காண அன்று
மாணவ பருவத்தில் சுடு மணலில் விளையாடியவர்
மஞ்சம் சுகவாசம் துறந்தவர் அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை-நாம்
மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்
மா-காவியமான இவ்புரட்சிவசனம்
மனதை சிந்திக்க வைத்து
மக்களின் மானம்காத்தவர் அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மரணத்தை பலமுறை கண்டு சிரித்து
மணவாளன் போல் மக்கள் மத்தியில்
மலைசூடி புன்னைகையில் வீரம் சுமந்து
மதியூகத்திற்க்கு சொந்தகாரன்அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மந்திரம் தந்திரம் அறியாது-தமிழ்
மக்களின் இன்னல்களை மட்டும்
மனதில் சுமந்து நடமாடிய மகாத்மாஅவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

மதிப்புரை என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மதிப்பீடும் என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மதிப்பெண்ணும் என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மயிலாடும் புன்னகையுடன் என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மனம் காத்த பெருமையும் உங்களுக்கு மட்டும்

மனிதநேயம் கொண்ட எங்கள் தோழனே
மன்னனே நீங்கள் என்றும்எங்களுக்கு மட்டும்
மண்ணில் வாழ்க உங்கள் புகழ்
மக்கள் மத்தியில் தொடர்வோம் உங்கள் பணி


அனைத்து தியாகிகளுக்கும் பொது மக்களுக்கும் எமது அஞ்சலிகள்
தோழமையுடன் வவிதரன்

Freitag, 17. Juni 2011


நாபா எனும் மனிதநேயம் என்றென்றும் நம்முடனே!!!!!
19.06.1990--19.06.2011


நட்பு சக்திக்கு வலுசேர்த்த
நடுநிலை நாயகன்எங்கள் தோழன் நாபா
நறுமணம் கொண்ட அரசியல் தந்து எங்களை
நடமாட வைத்தவர் எங்கள் தோழன் நாபா

நாணயமற்ற மனிதரையும் அணைத்து அவர்
நாணம் அடையசெய்தவர்எங்கள் தோழன் நாபா
நப்பாசைகளை சுமந்த நெஞ்சங்களையும்
நல் நெஞ்சம் கொண்டு முத்தமிட்டவர் தோழன் நாபா

நல்லெண்ணம் தனை சுமந்து நமக்கு
நல் திசைகாட்டி கல்லாகஎங்கள் தோழன் நாபா
நலிவடைந்த நம் மக்களுக்காக அன்று
நச்சுப்பாம்புடனும் கைகோர்த்தவர் தோழன் நாபா

அதிகாரமின்றி நம்மிடையே அன்னியனிடம்
அகராதியொன்றை அகலமுனைந்தவர்எங்கள் தோழன் நாபா
அகன்ற நல்மனதால் தோழையுடன் நம்மவரை
அகந்தையின்றி ஆழநினைத்தவர் தோழன் நாபா

அகமும் புறமும் அன்றும் என்றும்
அகிம்சைதனைபோதித்தவர் எங்கள் தோழன் நாபா
அக்கறை கொண்டு அப்பாவி மக்களை
அக்கரை சேர்க்க புறப்பட்டவர்தோழன் நாபா

அன்புக்கு அதிபதியாக என்றென்றும்
அகிலம் போற்ற வாழ்ந்து காட்டியவர் எங்கள் தோழன் நாபா
அங்கீகாரம் தனை வேண்டி மக்களுக்காக
அச்சமின்றி களம் புகுந்தவர்தோழர் நாபா

அவலம் நிறைந்த வாழ்வை அனுபவித்த நமக்காக
அகம்தனில் உதித்த ஆசைதனை துறந்தவர்தோழன் நாபா
அச்சங்கள் மீது பக்தி கொண்டவர் அல்ல
அகிம்சை மீது மோகம் கொண்டவர் தோழர் நாபா
அரக்கனையும் அன்பாய் அரணைக்கும்
அதிவாய்ந்த சக்தி தாங்கியவர் எங்கள் தோழர் நாபா

உண்மைகளை மறைத்து ஊமையாக
உலகவலம் வந்தவர் அல்ல எங்கள் தோழர் நாபா
உண்மைகளை உண்மையென்று
உலகிற்கு பறைசற்றியவர் தோழர் நாபா

உதிரக்கரத்தினால் உரிமைகளை வென்றெடுக்கமுடியாது
உடனிருந்தோர்க்கு கூறியவர் எங்கள் தோழர் நாபா
உயிரோட்டமாக எங்கள் மனங்களில் என்றென்றும்
உவகையுடன் வாழ்பவர் ஒருவர் தோழர் நாபா

உத்தமனாக உண்மையாளனாக மக்கள் மனதில்
உலாவரும் தியாகசுடர் எங்கள் தோழர் நாபா
உச்சம் தலையில் முத்தமிட்டு எங்களை
உயிர்மெய் தனைஉடனிருந்து காட்டியவர் தோழர் நாபா

கடமை தனில் கண்ணியவாளன் தோழன் பத்மநாபா
கர்வமில் கனிமொழி தந்தவர் தோழன் பத்மநாபா
கர்மம் தனை கண்களில் சுமந்தவர் தோழன் பத்மநாபா
கர்ணன் போல் கொடை வள்ளல் தோழன் பத்மநாபா
கயவனையும் மன்னிக்கும் மனம் படைத்தவர் தோழன் நாபா
கசப்புஇல்லாத சகிப்பு தன்மை தந்தவர் தோழன் நாபா


அனைத்து தியாகிகளுக்கும் பொது மக்களுக்கும் எமது அஞ்சலிகள்
தோழமையுடன் வவிதரன்

Donnerstag, 31. März 2011


பாசிசப் புலிகள் புரிந்த கந்தன் கருணை படுகொலை

30.03.1987...30.03.2011


கடமை தனை நெஞ்சில் சுமந்து

கர்மம் தனை வெல்வோம் என்று

களம் இறங்கிய தோழர்களை

கண்மணிகளை எங்கள் பொன்மணிகளை

கண் இமைக்குமுன் கயவர்கள்

சகோதரபடுகொலை புரிந்த நாள் இன்று

................

கண்ணீர் விடும் மக்களுக்காக

கவரிமான்களாய் அன்று

களம் நோக்கி புறப்பட்டு

காவியங்களாக பிரசன்னமாகவேண்டிய

கண்மணிகளை எங்கள் பொன்மணிகளை

கண் இமைக்குமுன் கயவர்கள்

சகோதரபடுகொலை புரிந்த நாள் இன்று

..................

காளையர்களாய் இருந்த இவர்கள்

கர்மவீரர்கள் போல் வலம் வந்து

கனிமொழி பேசிய தோழர்கள்

கச்சைகட்டி வேட்கையுடன் புறப்பட்ட

கண்மணிகளை எங்கள்பொன்மணிகளை

கண் இமைக்குமுன் கயவர்கள்

சகோதரபடுகொலை புரிந்த நாள் இன்று

..................

காதல் பரிவு பாசம் அனைத்தும் துறந்து

கடைசிவரை மக்கள் தொண்டே ஒன்றை

கடைப்பிடித்து வாழ்ந்த நம்

கண்களில் கடவுளாக காட்சிதந்த

கண்மணிகளை எங்கள் பொன்மணிகளை

கண் இமைக்குமுன் கயவர்கள்

சகோதரபடுகொலை புரிந்த நாள் இன்று

................

கனிந்து வருகிறது உங்கள்

கனவு பலிக்கும் நாள்

கயவர்கள் இப்போ இல்லை

கண்விழித்து வாருங்கள்

கடமை வெல்வோம் கடமை வெல்வோம்

தோழர்களே தோழர்களே..

தோழமையுடன் பாவரசன்