Freitag, 18. November 2016



அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று.........



அகிம்சைக்கு என்றும்
அத்திவார தாங்கியாக
அமைந்த அறிவின் சிகரம்
அன்பின் தோழமையின் மைந்தன்
அண்ணல் மகாத்மாதோழர் பத்பநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரவணைக்கும் கரங்களுடன்
அதிசயமனிதனாக - உலகில் 
அன்பை சுமந்து வலம் வந்த
அவதாரம் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரக்க குணம் படைத்துதோரையும்
அணைத்து முத்தமிட்டு
அறிவியல் கதைசொல்லும்
அத்திமலர்போல் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அற்புத மனிதனாக மக்களிடம் இருந்து
அச்சத்தைவிரட்டியடித்து--மனங்களில் 
அதிவீரத்தை தந்த புருசனவன்
அகராதியில் முதல் வார்த்தையாக
அமைந்த எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அசுரகுணம் படைத்தோரின் - வஞ்சகத்தின்
அதிசய துப்பாக்கிக்கு - அன்று
அப்பாவியாக இன்னுயிர் நீத்த
அருமை தோழனவன் என்றும்
அறம் பொருள் இன்பம் - இவை
அனைத்திற்கும் மறுநாமம்
அகிலத்தில் தோன்றிய தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அன்னை மடி(இந்தியா) பாசத்தின்
அணைப்பின்றி வராது ஓர்தீர்வு என்று
அறைகூவலுடன் கூறிய
அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று


அல்லும் பகலும் மக்களை சுமந்து
அடிமை விலங்கினை உடைப்போம் என்று
அமர்ந்திருந்து ஆயிரமாயிரம் யுக்திகள் வகுத்து
அதீவீர பாண்டியனாக எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று


அணிவகுத்து நின்ற தோழர்களின்
அகத்தில் நல்ஆசானாகஅள்ளித்தந்த
அரசியல் வார்த்தைகளினால்
அரும்பெரும் வடிவம் தந்த
அதிஉன்னதமான தோழன் எங்கள் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அமைதியாக நடைபோட்டு அன்னை மண்ணில்
ஆற்றிய தொண்டுகள்அத்தனைக்கும் 
அதாரமாய் மக்கள் மனதில்
அன்பைமட்டும்போதித்து அழியாத இடம்பிடித்து
அகிலம் போற்றும் எங்கள் தோழன்
அண்ணல் மாகாத்மா பத்மநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரக்கன் இப்போ இல்லை தோழா
அதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா
அவமான சின்னம்அவன் பாசிசம் தோழா

அதிகாரம் எங்களுக்கு வேணாம் தோழா
அமைதிபோராட்டம் செய்வோம் தோழா
அருகே எங்கள் பக்கம் வாருங்கள் தோழா
அனைவரும் அவர்நாமம் சிந்தனை செய்வோம்

Samstag, 18. Juni 2016

புதுயுகம் காண புறப்பட்ட எங்கள் மனித நேயனே......

புகழ்ச்சி தனை விரும்பாத 
புருவம் கொண்ட எங்கள் தோழனே
புனிதமான எங்கள் மக்களுக்காக
புன்னகை கொண்ட அகத்துடன்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புவியீர்ப்பு அறிந்த புருசர்கள் எல்லாம் 
புண்ணியம் செய்தனர் உனை பெற
புவிக்கு நீங்கள் ஒருவராய் -மக்கள் 
புதல்வர்களில் நீங்கள் முதல்வராய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.


புத்திசாலிகள் உன் வசம் 
புலமை கொண்டோர் பாடுவர் உன் நிஐம்
புவியியல் அறிந்த மானிடர் அறிவியலாய் 
புலம்புவர் மக்கள் வசம்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புன்னகை தெளிந்த முகத்துடன்
புரட்சி எழுர்ச்சி கொண்டு மக்கள் வசம்
புதிர் இன்றி எடுத்துரைத்தாய் 
புதுமுகங்ளையும் மலரவைத்தாய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புரியாத மனிதருக்கும்--அரசியல்
புரியாத மனிதருக்கும் 
புதினம்மின்றி புரியவைத்தாய்
புதைகுழிகள் சகோதர புதைகுழிகள் தேவையில்லை என்று
புன்சிரிப்புடன் சகோதரர்கு எடுத்துரைத்தாய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்திரன்களை இழந்த எங்கள்
புலத்தில் புலம்பிடும் தாய்களுக்கும்--சீரான
புதியபாதை வகுத்து 
புத்துணர்ச்சி தந்தவரே 
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்திமான்கள் கூறாத கூற்றுதனை அரசில்
புரியாத கூட்டத்திற்க்கு
புரியவைத்த எங்கள்  புதுமை பித்தனே
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்தகம்  எனும் அரசியல் புதையல் தனை
புரணமாய் எடுத்ரைக்க நாங்கள் என்றும்
புத்துயிர் கொண்டு புறப்படுவோம்
புண்ணியவதி ஈன்றெடுத்த 
புல்லறிவாளனே  எம்முடனே -என்றும்
புதுமை படைத்திடுவோம்  
புதுமை படைத்திடுவோம்  
புயல்  என புறப்பட்டு வா........
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

 உங்களின்  வரவுக்காக என்றும் காத்திருக்கும் தோழர்கள்