Freitag, 17. Juni 2011


நாபா எனும் மனிதநேயம் என்றென்றும் நம்முடனே!!!!!
19.06.1990--19.06.2011


நட்பு சக்திக்கு வலுசேர்த்த
நடுநிலை நாயகன்எங்கள் தோழன் நாபா
நறுமணம் கொண்ட அரசியல் தந்து எங்களை
நடமாட வைத்தவர் எங்கள் தோழன் நாபா

நாணயமற்ற மனிதரையும் அணைத்து அவர்
நாணம் அடையசெய்தவர்எங்கள் தோழன் நாபா
நப்பாசைகளை சுமந்த நெஞ்சங்களையும்
நல் நெஞ்சம் கொண்டு முத்தமிட்டவர் தோழன் நாபா

நல்லெண்ணம் தனை சுமந்து நமக்கு
நல் திசைகாட்டி கல்லாகஎங்கள் தோழன் நாபா
நலிவடைந்த நம் மக்களுக்காக அன்று
நச்சுப்பாம்புடனும் கைகோர்த்தவர் தோழன் நாபா

அதிகாரமின்றி நம்மிடையே அன்னியனிடம்
அகராதியொன்றை அகலமுனைந்தவர்எங்கள் தோழன் நாபா
அகன்ற நல்மனதால் தோழையுடன் நம்மவரை
அகந்தையின்றி ஆழநினைத்தவர் தோழன் நாபா

அகமும் புறமும் அன்றும் என்றும்
அகிம்சைதனைபோதித்தவர் எங்கள் தோழன் நாபா
அக்கறை கொண்டு அப்பாவி மக்களை
அக்கரை சேர்க்க புறப்பட்டவர்தோழன் நாபா

அன்புக்கு அதிபதியாக என்றென்றும்
அகிலம் போற்ற வாழ்ந்து காட்டியவர் எங்கள் தோழன் நாபா
அங்கீகாரம் தனை வேண்டி மக்களுக்காக
அச்சமின்றி களம் புகுந்தவர்தோழர் நாபா

அவலம் நிறைந்த வாழ்வை அனுபவித்த நமக்காக
அகம்தனில் உதித்த ஆசைதனை துறந்தவர்தோழன் நாபா
அச்சங்கள் மீது பக்தி கொண்டவர் அல்ல
அகிம்சை மீது மோகம் கொண்டவர் தோழர் நாபா
அரக்கனையும் அன்பாய் அரணைக்கும்
அதிவாய்ந்த சக்தி தாங்கியவர் எங்கள் தோழர் நாபா

உண்மைகளை மறைத்து ஊமையாக
உலகவலம் வந்தவர் அல்ல எங்கள் தோழர் நாபா
உண்மைகளை உண்மையென்று
உலகிற்கு பறைசற்றியவர் தோழர் நாபா

உதிரக்கரத்தினால் உரிமைகளை வென்றெடுக்கமுடியாது
உடனிருந்தோர்க்கு கூறியவர் எங்கள் தோழர் நாபா
உயிரோட்டமாக எங்கள் மனங்களில் என்றென்றும்
உவகையுடன் வாழ்பவர் ஒருவர் தோழர் நாபா

உத்தமனாக உண்மையாளனாக மக்கள் மனதில்
உலாவரும் தியாகசுடர் எங்கள் தோழர் நாபா
உச்சம் தலையில் முத்தமிட்டு எங்களை
உயிர்மெய் தனைஉடனிருந்து காட்டியவர் தோழர் நாபா

கடமை தனில் கண்ணியவாளன் தோழன் பத்மநாபா
கர்வமில் கனிமொழி தந்தவர் தோழன் பத்மநாபா
கர்மம் தனை கண்களில் சுமந்தவர் தோழன் பத்மநாபா
கர்ணன் போல் கொடை வள்ளல் தோழன் பத்மநாபா
கயவனையும் மன்னிக்கும் மனம் படைத்தவர் தோழன் நாபா
கசப்புஇல்லாத சகிப்பு தன்மை தந்தவர் தோழன் நாபா


அனைத்து தியாகிகளுக்கும் பொது மக்களுக்கும் எமது அஞ்சலிகள்
தோழமையுடன் வவிதரன்