Donnerstag, 18. November 2010

ஈழத்து மாத்மா!!! தோழர் நாபாவை ஈழமண்ணின் மடியில் ஈன்றெடுத்த நாள் இன்று 19.11.1951

நாபாவே நாபாவே உன்நாமம் உச்சரிக்க உச்சரிக்க
நாவில் நன்னீர் சுரக்குது தோழா
நன்மனிதன் நீங்கள் என்றும்
நடுநிலை நாயகன் என்றும்
நாங்கள் எடுத்துரைப்போம் தோழா!!!!

நல்லொதொரு தாயின் வயிற்றிலே
நலமுடனே பிறந்து வந்த எங்கள் தோழா
நட்டிலுள்ள மக்களின் கண்ணீர் துடைக்க
நகர்ந்து வந்த எங்கள் தோழா!!!!

நட்பு நாடிதேடி வந்த எங்களை
நாட்டதுடன் கட்டி அணைத்தாய் தோழா
நடத்துணராக நீங்களிருந்து---விடுதலைஎனும்
நடைப்பயணம் அழைத்து சென்றாய் தோழா!!!!

நாட்டாண்மை நாமறியோம்--என்றும்
நட்புறவோன்றே நாமறிவோம் தோழா
நாங்கள் உமக்காக காத்திருப்போம்--உடனே
நம்பிக்கையுடனே புறப்பட்டு வா தோழா!!!!


நாபா என்று உரைத்தாலே
நரம்பில் ஏதோ ஓர் உணர்வு பொங்குது தோழா
நாணயத்திற்கு அர்த்தம் தேடிப்போனோம்
நாபா என்று பொருள் ஒளி தந்தது தோழா!!!!

நலமுடனே மறுபடியும்
நம்மிடத்தே முகம் காட்டு தோழா
நடந்த சென்ற பாத சுவடுகளை--பின்பற்றி
நல்விடுதலை பயணம் நோக்கி விரைந்து செல்வோம் தோழா!!!!

நல்லெண்ணம் தனை நாம் என்றென்றும்
நலம் பேணிகாத்திடுவோம் தோழா
நமை என்றும் உங்கள் ஆத்மா
நல்வழிசென்றிடவே நமை வழிநடாத்தும் தோழா!!!!

நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்
----பாவரசன்----

Dienstag, 13. Juli 2010


நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் தோழர் க.பத்மநாபா
...............................................................

அகிம்சை தனை போதித்து
அகிலம் போற்ற வாழ்ந்தவர் தோழர் நாபா!

அடைக்கலம் தேடி வந்தோரை
அணைத்து முத்தமிட்டவர்… தோழர் நாபா!

அக்கினியில்லாத அரசியல் தந்து
அகராதியொன்றை வகுத்தவர் தோழர் நாபா!

அகம்பாவமில்லாத அகத்தை
அருமை தோழர்கள் முன் காட்டியவர் தோழர் நாபா!

அக்கரை மக்களை சோ்ப்போமென்று
அக்கறை கொண்டெழுந்தவர் தோழர் நாபா!

அப்பாவி மக்களுக்காக தன்னுயிரை
அர்ப்பணித்தவர் தோழர் நாபா!

அரண்மனை சுகபோகம் தனை
அப்-புறம் அகற்றியவர் தோழர் நாபா!

அருகிலிருந்த அசுத்தம்படிந்த மனிதரை
அன்புடன் வழியனுப்பியவர் தோழர் நாபா!

அரியாசனம் தேடி புறப்பட்டவர் அல்ல
அல்லல் படுவோர்க்காய் புறப்பட்டவர் தோழர் நாபா!

அவசியம் வேண்டி அவனியில்
அவதார புருசனாய் தோன்றியவர் தோழர் நாபா!

அனல் காற்று பலமாக வீசிய போதிலும்
அச்சமின்றி வீரநடை போட்டவர் தோழர் நாபா!

அக்கத்தில் மக்களின் ஆயிரம் குறைஏந்தி
அடக்கமுடன் தீர்வு தேடி புறப்பட்டவர் தோழர் நாபா!

அசட்டை செய்வோரையும் தன்னுடன் அணைத்து
அன்பு காட்டும் அருமை தோழர் நாபா!

அதிர்ச்சிகளை அதிகளவில் தாங்கிய
அதிபதிகெல்லாம் அதிபதி தோழர் நாபா!

அலங்காரமில்லாத பொதுவுடமை சுமந்த
அகிலத்தில் ஓர் அச்சாணி தோழர் நாபா!

அவலம் நிறைந்த மக்களின் அழுகை குரலை
அகிம்சை வழிநிறுத்த புறப்பட்ட தோழர் நாபா!

அம்புகள் ஏராளம் உமை நோக்கி வந்தாலும்
அதை தாங்கும் அணைகட்டு தோழர் நாபா!

அறம் பொருள் இன்பம் அணைத்தையும் துறந்து
அமைதிகாக்க இளமையை துறந்தவர் தோழர் நாபா!

அல்லும் பகலும் பொதுநல எண்ணத்தில் தனை
அர்ப்பணம் செய்தவர் தோழர் நாபா!!

அறிவிலிகளினால் அவமானம் பல சுமந்து
அண்ணல் மாகாத்மா நாமம் பெற்றவர் தோழர் நாபா!

புவியீர்பு சக்தியறிந்து புனிதமான ஈழமக்கள்
போராட்டத்திற்கு புத்துயிர் தந்த எங்கள் தோழர் நாபாவுக்காக…

தோழமையுடன் வவிதரன்