Samstag, 18. November 2017


தோழர் அமரர் க. பத்மநாபா பிறந்த தினம்


ன் இனத்தின் நல் விடியலுக்காக
தரணிதனில் கால் பதித்த எங்கள் தோழர் இவர்
தன் நலம் இல்லாது அன்று மக்களுக்காக
தயக்கமின்றி கால்பதித்து பயணம் தொடர்ந்த எங்கள் தோழரே
உங்கள் வயது  66... 

.... தளர் நடை துளர் இன்றி இலட்சிய பாதைநோக்கி
தன் இனம் காக்க புறப்பட்ட எங்கள் தோழர் இவர்
தன்னிறைவு எமக்கெல்லாம் வேண்டும் என்று- நற்
தன்மை அரசியல் தந்த எங்கள் தோழரே
உங்கள் வயது 66...
 


தற்புகழ்ச்சி பேசாது எங்கள் மக்களின்-நற்
தற்பெருமை தந்த எங்கள் தோழர் இவர்
தற்குறி பண்புகொண்டோரையும் அன்று
தஞ்சம் தந்து தளபதிகளாக்கிய எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 66... 


தடுமாற்றமில்லாத வினாக்களுக்கு விடைகள் சுமந்து
தமிழ்பேசும் மக்கள்முன்தந்த எங்கள் தோழர் இவர்
தாயின் கருவறையிலும் தங்கியிருந்தபோதும்
தமிழிரின் சொர்பனம் என்னவென்று அறிந்த எங்கள் தோழரே
உங்கள் வயது  66...


 தயக்கம் தந்த ஐயமின்றி பொதுநலத்தை அன்று
தணிக்கை இன்றி தந்த எங்கள் தோழர் இவர்
தன் கடமை என்னவென்று பாசறையில் அன்று
தன்னடக்கத்துடன் போதித்த எங்கள் தோழரே
உங்கள் வயது  66...


 தளர்ச்சி இன்றி உன்மக்களுக்காக உன்மேனியில்
தளும்புகள் ஆயிரம் தாங்கிய எங்கள் தோழர் இவர்
தார்மிக பொறுப்புக்கள் நமக்கே என்று-அதிக சுமைகளை
தலை வணங்கி ஏற்றுக்கொண்ட எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 66...


 தலைமுறைகள் வாழ உங்கள் மதிப்பில்லா
தன்னுயிர் தனை தந்த எங்கள் தோழர் இவர்
தட்சனையின்றி உங்கள் நன்நீர்அரசியலை நமக்கு
தலைக்கவசமாக தந்த எங்கள் தோழரே
உங்கள் வயது இன்று 66...



 தரம் கொட்ட மனிதர்களால் நீங்கள்
தரைதனில் புதைக்கப்பட்டாலும்
தரமுள்ள மனிதர்கள் யாரென்று
தர்மம் தெரிந்த மானிடர்கள்
தவறை உணர்ந்து அழும் காலம் இப்போ தோழா.
தகமையுள்ளவர்கள் நாமே.....
தழைத்து வா தோழா. தழைத்து வா தோழா-நற்
தமிழருக்காக தடைகளை தாண்டி பயணிப்போம்
...

Freitag, 18. November 2016



அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று.........



அகிம்சைக்கு என்றும்
அத்திவார தாங்கியாக
அமைந்த அறிவின் சிகரம்
அன்பின் தோழமையின் மைந்தன்
அண்ணல் மகாத்மாதோழர் பத்பநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரவணைக்கும் கரங்களுடன்
அதிசயமனிதனாக - உலகில் 
அன்பை சுமந்து வலம் வந்த
அவதாரம் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரக்க குணம் படைத்துதோரையும்
அணைத்து முத்தமிட்டு
அறிவியல் கதைசொல்லும்
அத்திமலர்போல் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அற்புத மனிதனாக மக்களிடம் இருந்து
அச்சத்தைவிரட்டியடித்து--மனங்களில் 
அதிவீரத்தை தந்த புருசனவன்
அகராதியில் முதல் வார்த்தையாக
அமைந்த எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அசுரகுணம் படைத்தோரின் - வஞ்சகத்தின்
அதிசய துப்பாக்கிக்கு - அன்று
அப்பாவியாக இன்னுயிர் நீத்த
அருமை தோழனவன் என்றும்
அறம் பொருள் இன்பம் - இவை
அனைத்திற்கும் மறுநாமம்
அகிலத்தில் தோன்றிய தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அன்னை மடி(இந்தியா) பாசத்தின்
அணைப்பின்றி வராது ஓர்தீர்வு என்று
அறைகூவலுடன் கூறிய
அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று


அல்லும் பகலும் மக்களை சுமந்து
அடிமை விலங்கினை உடைப்போம் என்று
அமர்ந்திருந்து ஆயிரமாயிரம் யுக்திகள் வகுத்து
அதீவீர பாண்டியனாக எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று


அணிவகுத்து நின்ற தோழர்களின்
அகத்தில் நல்ஆசானாகஅள்ளித்தந்த
அரசியல் வார்த்தைகளினால்
அரும்பெரும் வடிவம் தந்த
அதிஉன்னதமான தோழன் எங்கள் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அமைதியாக நடைபோட்டு அன்னை மண்ணில்
ஆற்றிய தொண்டுகள்அத்தனைக்கும் 
அதாரமாய் மக்கள் மனதில்
அன்பைமட்டும்போதித்து அழியாத இடம்பிடித்து
அகிலம் போற்றும் எங்கள் தோழன்
அண்ணல் மாகாத்மா பத்மநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று


அரக்கன் இப்போ இல்லை தோழா
அதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா
அவமான சின்னம்அவன் பாசிசம் தோழா

அதிகாரம் எங்களுக்கு வேணாம் தோழா
அமைதிபோராட்டம் செய்வோம் தோழா
அருகே எங்கள் பக்கம் வாருங்கள் தோழா
அனைவரும் அவர்நாமம் சிந்தனை செய்வோம்

Samstag, 18. Juni 2016

புதுயுகம் காண புறப்பட்ட எங்கள் மனித நேயனே......

புகழ்ச்சி தனை விரும்பாத 
புருவம் கொண்ட எங்கள் தோழனே
புனிதமான எங்கள் மக்களுக்காக
புன்னகை கொண்ட அகத்துடன்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புவியீர்ப்பு அறிந்த புருசர்கள் எல்லாம் 
புண்ணியம் செய்தனர் உனை பெற
புவிக்கு நீங்கள் ஒருவராய் -மக்கள் 
புதல்வர்களில் நீங்கள் முதல்வராய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.


புத்திசாலிகள் உன் வசம் 
புலமை கொண்டோர் பாடுவர் உன் நிஐம்
புவியியல் அறிந்த மானிடர் அறிவியலாய் 
புலம்புவர் மக்கள் வசம்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புன்னகை தெளிந்த முகத்துடன்
புரட்சி எழுர்ச்சி கொண்டு மக்கள் வசம்
புதிர் இன்றி எடுத்துரைத்தாய் 
புதுமுகங்ளையும் மலரவைத்தாய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புரியாத மனிதருக்கும்--அரசியல்
புரியாத மனிதருக்கும் 
புதினம்மின்றி புரியவைத்தாய்
புதைகுழிகள் சகோதர புதைகுழிகள் தேவையில்லை என்று
புன்சிரிப்புடன் சகோதரர்கு எடுத்துரைத்தாய்
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்திரன்களை இழந்த எங்கள்
புலத்தில் புலம்பிடும் தாய்களுக்கும்--சீரான
புதியபாதை வகுத்து 
புத்துணர்ச்சி தந்தவரே 
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்திமான்கள் கூறாத கூற்றுதனை அரசில்
புரியாத கூட்டத்திற்க்கு
புரியவைத்த எங்கள்  புதுமை பித்தனே
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

புத்தகம்  எனும் அரசியல் புதையல் தனை
புரணமாய் எடுத்ரைக்க நாங்கள் என்றும்
புத்துயிர் கொண்டு புறப்படுவோம்
புண்ணியவதி ஈன்றெடுத்த 
புல்லறிவாளனே  எம்முடனே -என்றும்
புதுமை படைத்திடுவோம்  
புதுமை படைத்திடுவோம்  
புயல்  என புறப்பட்டு வா........
புதுயுகம் காண புறப்பட எங்கள் மனித நேயனே.

 உங்களின்  வரவுக்காக என்றும் காத்திருக்கும் தோழர்கள் 

Mittwoch, 19. November 2014


     புனிதமகாத்மாவே                                                          எங்கள் தோழனே....

புனித மண்ணில் -உதிர்த்த
புனித மகாத்மா-தன்
புகழ்தேடா  மக்கள்
புகழ காக்க புறப்பட்டு
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புதுயுகம் படைத்து
புரட்சி பாதையிலே பயணித்து
புன்னகையுடன் மக்களின் முன்னே
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புருவங்களில்..எங்கள் புருவங்களில்
புத்துணர்ச்சி செறித்தோங்க
புவியில் எழுச்சி வழிகாட்டி
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புத்திசாலிகள் ஆயிரம் நம்ஈழ மண்ணில்
புனிதமான  மக்கள் பக்தி கொண்டு
புதிய சரித்திரம் அடைந்திட
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புலம்பிடும் மக்களுக்காக
புவியீர்ப்பு சக்தி அறியாத சில
புல்லுருவிகள் தோழ்மீதும் தன்கரம் பதித்து
புவியில் வலம் வந்த எங்கள் 
புனிதமகாத்மாவே தோழனே உங்கள் வயது 63

புனிதனே உனை தோழன் என நாம் அடைய
புண்ணயம் நாம் அடைந்தோம் தோழா
புகழ்மாலைகள்  என்றும் புன்கைமாலைகளாக
புரட்சியாளனே உன் தோழ்களில்.. 

வாழீ உங்கள் நபா நாமம் வாழீ

உங்களின் புரட்சி நினைவுகளுடன் தோழர்கள்