Sonntag, 21. Februar 2010


தோழர் நாபாவே எங்கள் அருகே நீங்கள் இருந்திருந்தால்......

நல்லொதொரு தீர்வு கிடைத்திருக்கும்
நற்பெயர் பெற்ற எங்கள் தோழனை
நண்பன் ஒருவன் உங்கள் அருகில் இருந்து
நயவஞ்சகம் செய்தானோ தோழா!!!

நன்றி கெட்ட செயல் அல்லவா
நம் மக்கள் உங்களை மறக்கவில்லை
நடைபயிலும் குழந்தைக்கும் உண்மையில்
நடந்த சம்பவம்கூறப்படும் தோழா!!!

நன்நடத்தையில் நீங்கள் பெற்ற
நல்லதொரு காவியம் நீங்கள்
நம்பியிருந்த கட்டைவிரல் (பாசிச தலைவன்)
நம்கண்ணில் குத்தினரோ தோழா!!!

நகம் தவறுதலாக தாக்கினால் தாங்கலாம்

நம்பியிருந்த நண்பன் முதுகிலே தாக்கினால்
நம்ப முடியவில்லை -நீங்கள் என்றும்
நம்பக்கதிலிருப்பது போல ஓர் உணர்வு தோழா!!!

நத்தைகளையும் புல்லுருவிகளையும்
நடைதனில் நோக்கி விடலாம்
நடைபிணங்களாக அலையும் பாசிசங்கள்
நகர்ந்து சென்றதை காணவில்லையா தோழா!!!

நரை தலையில் விழுந்தாலும் கொள்கையில்
நற் கொள்கையில் நாம் தடம்புரளவில்லை
நடாத்தி புறப்படுவோம் செயல்படுவோம்
நம்பிக்கையெனும் விவேகத்துடன் தோழா!!!

நாவிற்கினிய அரசியலை தோழர்களுக்கு

நலம்பெறவே தந்தவர் நீங்கள்
நல்லதொரு எதிரிகாலம் என்றும்
நாம் அமைப்போம் உங்கள் ஆசியுடன் தோழா..!!!

புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---

நல்வழிகாட்டி ஆசானாக எங்கள் தோழர் க.பத்மநாபா

அன்பினால் அரவணைத்த எங்கள் தோழர்
அமைதி வடிவத்தை தந்த எங்கள் தோழர்
அத்தியாயமாக அரசியல் தந்த எங்கள் தோழர்
அப்பழுக்கில்லாத தோழன் எங்கள் தோழர்

சுயநலத்ததை சுட்டெரித்த எங்கள் தோழர்
சுகங்களை துறந்த எங்கள் தோழர்
சுகமாக மக்களை அணைத்த எங்கள் தோழர்
சுமைகளை சுமந்த எங்கள் தோழர்

கல்மனது இல்லதா எங்கள் தோழர்
கவரிமான் குணமுடைய எங்கள் தோழர்
கருந்தாடி அமைந்த எங்கள் தோழர்
காவியங்கள் பல படைத்த எங்கள் தோழர்

கர்மவீர்களின் தலைவன் எங்கள் தோழர்…
நல் ஆசான் எங்கள் தோழர்

நல் வார்த்தைகளை விதைத்த எங்கள் தோழர்
நல்வழிகாட்டிக் கல்லாக எங்கள் தோழர்

நயவஞ்சகமறியா எங்கள் தோழர்
நல்மதிப்பு பெற்ற எங்கள் தோழர்
இறமை என்னவென்று அறிந்த எங்கள் தோழர்

இமைகளை என்று மே மூடாத எங்கள் தோழர்

இறுமாப்பு இல்லாத எங்கள் தோழர்
இன்பங்களை துறந்த எங்கள் தோழர்
தீமைகள் செய்தவரை மன்னித்த எங்கள் தோழர்
திருந்திவா என்று கூறிய எங்கள் தோழர்

தினம் தினமும் காத்து நின்ற எங்கள் தோழர்
திறன் படைத்த கரங்களை முத்தமிட்ட எங்கள் தோழர்
எதிரிகள் உனை எதிர்க்காத எங்கள் தோழர்

எதிர்நீச்சல் போடுவதில் வீரன் எங்கள் தோழர்

என் எனது அறிய எங்கள் தோழன்
எதார்த்தம் நியைவே நிறைந்த எங்கள் தோழர்
இத்தனைக்கும் ஓரே வடிவம் எங்கள் தோழர்

இயல்பாக கூறமுனைந்தால் அவரே எங்கள் பத்மநாபா தோழர்

புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---

Donnerstag, 11. Februar 2010

உன்னதமான தோழன் எங்கள் க.பத்மநாபா........

பத்மநாபாவெனும் பல்கலைக்கழகம் தனில்
பக்குவமாக அரசியல்கற்ற தோழர்கள் நாங்கள்
பார்போற்றும் ஆசானின் மடியில் அமர்ந்திருந்து
பண்பான போதனைகளை செவிமடுத்த தோழர்கள் நாங்கள்

பாசறைதனில் மாசற்ற முகமலர்ச்சி கண்டு

பண்பாளனாக நேசித்த தோழர்கள் நாங்கள்
பகைவன் யாரேனும் அனிதியாக பறைசாற்ற நினைத்தலும்
பண்ணாளனாக மாறும் நல்உள்ளம் கொண்டவரை
பரிவின் சுவாசத்தின் அதிர்வை உணர்ந்த தோழர்கள் நாங்கள்

பணிகளை துணிகரமாக செயல்படுத்திய வீமனை அன்று
பரிந்துரைப்பு இல்லாம் நோக்கிய தோழர்கள் நாங்கள்
பாமரமக்களும் உற்று பார்த்த பரந்தாமனை கண்டு
பக்கம் பக்கமாய் புகழ்ந்ததை பார்த்த தோழர்கள் நாங்கள்

பாவிகளை தன்பக்கத்திலிருந்தாலும் எங்கள் செயளாலர்
பகுத்தறிவு ஊட்டிச்சென்றதை கண்டுகழித்த தோழர்கள்
பாரினில் இவரை போற சொல்லின் செல்வரை நாம்
பார்த்தில்லை எனஇறுமாப்பு கொண்ட தோழர்கள் நாங்கள்
பாரதத்தின் காந்தியை நாங்கள் கண்டதில்லைதோழா
பாசமிக்க உங்களை மாகாத்மாவாக காண்கின்றோம்
பாசிசம் சுமந்த ஓருவன் பச்சை மாமிசம் உண்ணும் கழுகுக்கு
பலகாலம் வாழவேண்டிய உங்களை பறிகொடுத்து
பாதை அறியாமல் தடுமாறும் தோழர்கள் நாங்கள்

பாவிகள் இப்போ பாரினில் இல்லை தோழா
பாதை தொடர்ந்து செல்வோம் பண்பாளனே
பயணங்கள் இடரின்றி வகுத்து
பாதையினிலே காத்திருக்கும் தோழர்கள் நாங்கள்
புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---
ஊரெங்கும் தேடினேன்!!! ஒருவரைக் கண்டேன் அந்தஒருவரிடம் தேடினேன்!!! பொது நலத்தைக் கண்டேன்..


காங்கேசன் மண்ணிலே
கருவான எம்தோழர்
கண்மணிகளாம் மக்களின்
கதிர்வீச்சின் தியாகியாய்
களமிறங்கிய தோழரின்
களங்கமில்லாத பயணம்
காலில் இடர்பட்ட தடைகளை
கடந்து சென்ற வேகம்
கண்ணீர் வரவைக்கும் என்றும்..
கரை நோக்கிய விடியல் தாங்கி -நற்
கதைகள் பலசிந்தையில் சுமந்து
கவலைகளை காலில் மிதித்து
கடமைதனில் நோட்டமிட்டு
கர்மவீரனாக வலம் வந்து
காலத்தின் சுற்ரோட்டம் தனை அறிந்து
கர்வம் ஏதும் இல்லாது
கதிரவன்போல் நல்ஒளி தந்தாய்..
கண்ணிவைத்த நரிகளை
கணப்பொழுதில் மன்னித்தாய்
கரி கொண்டு வர்ணம் தீட்ட
கங்கனம் கொண்டோரை
கண்கொடுத்து பாராமல் நெடுங்
கடல் தனை தாண்டிச் சென்றாய்
களிப்படைந்த தோழர்கள் உங்களால்
கறையேதும் இல்லாமல்
களைப்பு ஏதும் இல்லாமல்
கரையேறி விளையாடினர் வீரக்களம்
கனிவான மொழிதந்து எங்களை
காப்பாற்றி கலியுக சுயநலவாதிகளிடம்
கபடமில்லா யுத்தமொன்றை
கண்ணெதிரே எதிர்கொள்கின்றோம்
கண்ணியவாளன் நம்தோழனை
கறை படிந்த பாசிசவாதி ஓருவன்
காரணங்கள் இன்றி கசக்கி எறிந்தானே..
கரம்தனை தோழில் போட்ட நண்பனே
கல்லறைக்கு அனுப்பினானே
கட்டுப்படவில்லை எமது நெஞ்சம்
கயவனவன் நம் கண்முன்னே
கவர்ந்து சென்றானோ தோழனை
காத்திருக்கிறோம் என்றென்றும்
களங்கமில்லா உங்கள் முகம்காண
கண்ணீர் விழிகளுடன் காத்திருக்கின்றோம்
காலம் தாழ்த்தாது விரைந்து வாருங்கள் தோழா!!!
புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---

Mittwoch, 10. Februar 2010

புவியீர்ப்பு சக்திஅறிந்த புரட்சி தோழர் க.பத்மநாபா.........


புதியபாதை வகுத்து தந்த
புண்ணிய சீலன் அவர்
புன்னகைக்கு நீங்கள் தான் தோழா
புவியில் ஓர் அரசனாக
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புத்திமானின் ஒருவராக புவியில்
புகழ் சுமந்து வலம் வந்த எங்கள் தோழன்
புரிந்தவர்களுக்கு புதிர் இல்லாமல்
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புகல்லிடம் தேடிவந்த தோழர்களை--அரசியல்
புத்திசாலியாக்கிய பெருமைகுரியவர்
புண்ணியவதி உங்கள் தாய்--நாங்கள்
புண்ணியம் செய்துள்ளோம் புனிதரே
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்

புன்னகை முகத்துடன் அரசியல் தாகம் தந்து
புதிதாக மண்ணில் பிறக்க வைத்து
புகழ் வேண்டா தன்னம்பிக்கை கொண்டு
புவிதனில் வலம் வந்து தோழர்களின்
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புதுயுகம் ஒன்றை படைத்து
புழுதியில் வாடும் மக்களிடம் ஒப்படைக்க
புரட்சிவீரனாக தோழர்கள் மத்தியில்
புதுமை மைந்தனாக புறப்பட்டு
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புலவர்கள் விளைந்த இந்திய மண்ணில்
புகழ்ச்சியும் வளர்ச்சியும் கண்டு பொறுக்காத
புழுக்களாம் தந்திர புலிகளின் பாசிசம்
புனிதத்தின் நாயகனை அன்று
புழுதி மண்ணில் சாயத்தனரோ....
புவியும் கலங்கிநின்றது மலர்களும்
புன்னகை தர மறுத்தது அன்று
புல்லுருவிகளின் செயல்களினால்
புவிதனில் மக்களின் கண்ணீர் வெள்ளமாக
புதிதாக ஒர் ஆறு கடலை நோக்கி ஓடியது
புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---

Dienstag, 9. Februar 2010

எங்கள் தோழர் என்றும் நாபாவே ...........


அகிம்சைக்கு என்றும்
அத்திவார தாங்கியாக
அமைந்த அறிவின் சிகரம்
அன்பின் தோழமையின் மைந்தன்
அண்ணல் மகாத்மாதோழர் பத்பநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரவணைக்கும் கரங்களுடன்
அதிசயமனிதனாக - உலகில்
அன்பை சுமந்து வலம் வந்த
அவதாரம் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரக்க குணம் படைத்துதோரையும்
அணைத்து முத்தமிட்டு
அறிவியல் கதைசொல்லும்
அத்திமலர்போல் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அற்புத மனிதனாக மக்களிடம் இருந்து
அச்சத்தைவிரட்டியடித்து--மனங்களில்
அதிவீரத்தை தந்த புருசனவன்
அகராதியில் முதல் வார்த்தையாக
அமைந்த எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அசுரகுணம் படைத்தோரின் - வஞ்சகத்தின்
அதிசய துப்பாக்கிக்கு - அன்று
அப்பாவியாக இன்னுயிர் நீத்த
அருமை தோழனவன் என்றும்
அறம் பொருள் இன்பம் - இவை
அனைத்திற்கும் மறுநாமம்
அகிலத்தில் தோன்றிய தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அன்னை மடி(இந்தியா) பாசத்தின்
அணைப்பின்றி வராது ஓர்தீர்வு என்று
அறைகூவலுடன் கூறிய
அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று

அல்லும் பகலும் மக்களை சுமந்து
அடிமை விலங்கினை உடைப்போம் என்று
அமர்ந்திருந்து ஆயிரமாயிரம் யுக்திகள் வகுத்து
அதீவீர பாண்டியனாக எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று

அணிவகுத்து நின்ற தோழர்களின்
அகத்தில் நல்ஆசானாகஅள்ளித்தந்த
அரசியல் வார்த்தைகளினால்
அரும்பெரும் வடிவம் தந்த
அதிஉன்னதமான தோழன் எங்கள் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அமைதியாக நடைபோட்டு அன்னை மண்ணில்
ஆற்றிய தொண்டுகள்அத்தனைக்கும்
அதாரமாய் மக்கள் மனதில்
அன்பைமட்டும்போதித்து அழியாத இடம்பிடித்து
அகிலம் போற்றும் எங்கள் தோழன்
அண்ணல் மாகாத்மா பத்மநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரக்கன் இப்போ இல்லை தோழா
அதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா
அவமான சின்னம்அவன் பாசிசம் தோழா

அதிகாரம் எங்களுக்கு வேணாம் தோழா
அமைதிபோராட்டம் செய்வோம் தோழா
அருகே எங்கள் பக்கம் வாருங்கள் தோழா
அனைவரும் அவர்நாமம் சிந்தனை செய்வோம்

புரட்சிவேட்கை...தோழமையுடன் ----பாவரசன்---
ஆணவத்தை விலக்கிவிடு
அகங்காரத்தை ஒதுக்கிவிடு
அதிகாரத்தை சிதைத்து விடு
அடிமை தனத்தை உடைத்து விடு
அமைதியாக இருந்து சிந்தித்து விடு
அகிம்சை தனை கைப்பற்றிவிடு
அன்புதனை செலுத்திவிடு...
----பாவரசன்---