நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் தோழர் க.பத்மநாபா
...............................................................
அகிம்சை தனை போதித்து
அகிலம் போற்ற வாழ்ந்தவர் தோழர் நாபா!
அடைக்கலம் தேடி வந்தோரை
அணைத்து முத்தமிட்டவர்… தோழர் நாபா!
அணைத்து முத்தமிட்டவர்… தோழர் நாபா!
அக்கினியில்லாத அரசியல் தந்து
அகராதியொன்றை வகுத்தவர் தோழர் நாபா!
அகராதியொன்றை வகுத்தவர் தோழர் நாபா!
அகம்பாவமில்லாத அகத்தை
அருமை தோழர்கள் முன் காட்டியவர் தோழர் நாபா!
அருமை தோழர்கள் முன் காட்டியவர் தோழர் நாபா!
அக்கரை மக்களை சோ்ப்போமென்று
அக்கறை கொண்டெழுந்தவர் தோழர் நாபா!
அக்கறை கொண்டெழுந்தவர் தோழர் நாபா!
அப்பாவி மக்களுக்காக தன்னுயிரை
அர்ப்பணித்தவர் தோழர் நாபா!
அர்ப்பணித்தவர் தோழர் நாபா!
அரண்மனை சுகபோகம் தனை
அப்-புறம் அகற்றியவர் தோழர் நாபா!
அப்-புறம் அகற்றியவர் தோழர் நாபா!
அருகிலிருந்த அசுத்தம்படிந்த மனிதரை
அன்புடன் வழியனுப்பியவர் தோழர் நாபா!
அன்புடன் வழியனுப்பியவர் தோழர் நாபா!
அரியாசனம் தேடி புறப்பட்டவர் அல்ல
அல்லல் படுவோர்க்காய் புறப்பட்டவர் தோழர் நாபா!
அல்லல் படுவோர்க்காய் புறப்பட்டவர் தோழர் நாபா!
அவசியம் வேண்டி அவனியில்
அவதார புருசனாய் தோன்றியவர் தோழர் நாபா!
அவதார புருசனாய் தோன்றியவர் தோழர் நாபா!
அனல் காற்று பலமாக வீசிய போதிலும்
அச்சமின்றி வீரநடை போட்டவர் தோழர் நாபா!
அச்சமின்றி வீரநடை போட்டவர் தோழர் நாபா!
அக்கத்தில் மக்களின் ஆயிரம் குறைஏந்தி
அடக்கமுடன் தீர்வு தேடி புறப்பட்டவர் தோழர் நாபா!
அடக்கமுடன் தீர்வு தேடி புறப்பட்டவர் தோழர் நாபா!
அசட்டை செய்வோரையும் தன்னுடன் அணைத்து
அன்பு காட்டும் அருமை தோழர் நாபா!
அன்பு காட்டும் அருமை தோழர் நாபா!
அதிர்ச்சிகளை அதிகளவில் தாங்கிய
அதிபதிகெல்லாம் அதிபதி தோழர் நாபா!
அதிபதிகெல்லாம் அதிபதி தோழர் நாபா!
அலங்காரமில்லாத பொதுவுடமை சுமந்த
அகிலத்தில் ஓர் அச்சாணி தோழர் நாபா!
அகிலத்தில் ஓர் அச்சாணி தோழர் நாபா!
அவலம் நிறைந்த மக்களின் அழுகை குரலை
அகிம்சை வழிநிறுத்த புறப்பட்ட தோழர் நாபா!
அகிம்சை வழிநிறுத்த புறப்பட்ட தோழர் நாபா!
அம்புகள் ஏராளம் உமை நோக்கி வந்தாலும்
அதை தாங்கும் அணைகட்டு தோழர் நாபா!
அதை தாங்கும் அணைகட்டு தோழர் நாபா!
அறம் பொருள் இன்பம் அணைத்தையும் துறந்து
அமைதிகாக்க இளமையை துறந்தவர் தோழர் நாபா!
அமைதிகாக்க இளமையை துறந்தவர் தோழர் நாபா!
அல்லும் பகலும் பொதுநல எண்ணத்தில் தனை
அர்ப்பணம் செய்தவர் தோழர் நாபா!!
அர்ப்பணம் செய்தவர் தோழர் நாபா!!
அறிவிலிகளினால் அவமானம் பல சுமந்து
அண்ணல் மாகாத்மா நாமம் பெற்றவர் தோழர் நாபா!
அண்ணல் மாகாத்மா நாமம் பெற்றவர் தோழர் நாபா!
புவியீர்பு சக்தியறிந்து புனிதமான ஈழமக்கள்
போராட்டத்திற்கு புத்துயிர் தந்த எங்கள் தோழர் நாபாவுக்காக…
போராட்டத்திற்கு புத்துயிர் தந்த எங்கள் தோழர் நாபாவுக்காக…
தோழமையுடன் வவிதரன்