Donnerstag, 18. November 2010

ஈழத்து மாத்மா!!! தோழர் நாபாவை ஈழமண்ணின் மடியில் ஈன்றெடுத்த நாள் இன்று 19.11.1951

நாபாவே நாபாவே உன்நாமம் உச்சரிக்க உச்சரிக்க
நாவில் நன்னீர் சுரக்குது தோழா
நன்மனிதன் நீங்கள் என்றும்
நடுநிலை நாயகன் என்றும்
நாங்கள் எடுத்துரைப்போம் தோழா!!!!

நல்லொதொரு தாயின் வயிற்றிலே
நலமுடனே பிறந்து வந்த எங்கள் தோழா
நட்டிலுள்ள மக்களின் கண்ணீர் துடைக்க
நகர்ந்து வந்த எங்கள் தோழா!!!!

நட்பு நாடிதேடி வந்த எங்களை
நாட்டதுடன் கட்டி அணைத்தாய் தோழா
நடத்துணராக நீங்களிருந்து---விடுதலைஎனும்
நடைப்பயணம் அழைத்து சென்றாய் தோழா!!!!

நாட்டாண்மை நாமறியோம்--என்றும்
நட்புறவோன்றே நாமறிவோம் தோழா
நாங்கள் உமக்காக காத்திருப்போம்--உடனே
நம்பிக்கையுடனே புறப்பட்டு வா தோழா!!!!


நாபா என்று உரைத்தாலே
நரம்பில் ஏதோ ஓர் உணர்வு பொங்குது தோழா
நாணயத்திற்கு அர்த்தம் தேடிப்போனோம்
நாபா என்று பொருள் ஒளி தந்தது தோழா!!!!

நலமுடனே மறுபடியும்
நம்மிடத்தே முகம் காட்டு தோழா
நடந்த சென்ற பாத சுவடுகளை--பின்பற்றி
நல்விடுதலை பயணம் நோக்கி விரைந்து செல்வோம் தோழா!!!!

நல்லெண்ணம் தனை நாம் என்றென்றும்
நலம் பேணிகாத்திடுவோம் தோழா
நமை என்றும் உங்கள் ஆத்மா
நல்வழிசென்றிடவே நமை வழிநடாத்தும் தோழா!!!!

நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்
----பாவரசன்----

Keine Kommentare:

Kommentar veröffentlichen