Mittwoch, 18. Juni 2014

தோழர் நாபா இவ் உலகில் நல் திசைகாட்டி

உன் தெளிந்த புன்னகை தேடி
உன்னிடம் வந்தவர் கோடி-தோழா
உன் நற்சிந்தனை கண்டு
உலகில் பலமுகம் வாடி நின்றது -தோழா 
...
உரிமை  குரல் எழுப்பி- நல் 
உச்சரிப்புகள் தாங்கி நின்றவரே  தோழா
உங்கள்  இனத்துக்காக  புறப்பட்டு
உருமாறிய தீயவர்க்கு  உன்பொன்-
உடல் கொடுத்தவரே எங்கள் தோழா
....
உண்மைகளை உண்மை என்று-  பூமியில்
உதித்த நற்கருத்துகள் தந்தவரே தோழா
உதிரம் தோய்ந்த கரங்களைவிட்டு
உன்னதமான பணிகளை தொடர்ந்த தோழா
....
உத்தமன் நீங்கள் என்றும்
உலகத்தார் பறைசார்றினரே தோழா
உணர்வுகள் பொங்க உரிமை பேச்சுக்கள்
உணர்தியவரே எங்கள் தோழா
.....
உவமானம் நீயென்று உன்மக்கள்
உதடு சிவக்க அன்றும் என்றும்
உரைத்தனரே எங்கள் தோழா
உலகில் மறுபடியும் மலர்ந்து வா எங்கள் தோழா
....
உபயோகம் பெற்ற பலர்-உனை
உதறிதள்ளிபோன வரலாறும் உண்டு தோழா
உவமேயமாய் நீங்களிருக்க
உங்கள் தோழர் எமக்கென்ன துயரம் தோழா
.....
உங்கள் வரவுக்காக காத்திருக்கும் 
உங்கள் உயிரானவர்கள் நாங்கள் தோழா
உங்கள் மடியிலிருந்து மறுமடியும்
உறுதியான அரசியல் பயில-எங்கள்
உள்ளத்தினுள் பன்மடங்கு ஆவல் தோழா
....
உயிர் மெய்யெழுத்து அரசியலில் 
உண்மையாய்அடியெடுத்து தந்தவர் நீங்கள் தோழா
உரக்க சொல்கிறோம் ஒரு முறையாவது
உத்தம  பூமியில் அவதாரமாய் வாருங்கள் தோழா

நாம் மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை
மக்களுக்காவே மண்ணை நேசிக்கின்றோம்
---தோழர் க.பத்மநாபா---

புரட்சி வேட்கை தோழமையுடன்
---தோழர் வவி--


Keine Kommentare:

Kommentar veröffentlichen